முதலமைச்சரின் பயோபிக் எடுக்க விரும்பும் ஏ.ஆர்.முருகதாஸ்
முருகதாஸ்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறாத நிலையில் அடுத்து படம் எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் உடன் அடுத்து அவர் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

ஸ்டாலின் பயோபிக்
முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கையை பற்றிய கண்காட்சி சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் அதை முருகதாஸ் சென்று பார்வையிட்டு இருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முருகதாஸ் தான் ஸ்டாலினின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என கூறி இருக்கிறார்.
இந்திய அளவில் இந்த பதிவுகளை படமாக எடுக்க முடியும், அந்த அளவுக்கு மனதை பாதிக்கும் சம்பவங்கள் இருக்கின்றன என முருகதாஸ் கூறி இருக்கிறார்.

திடீரென முடிவுக்கு வரும் இரண்டு விஜய் டிவி சீரியல்கள்! கடைசி எபிசோடு தேதி இதோ