தலை, கையில் கட்டுடன் மருத்துவமனையில் சோழன்; பார்க்க வந்த நிலா.. அய்யனார் துணை சீரியல் புரோமோ
மருத்துவமனையில் சோழன்
சோழன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என தெரிந்தபின், விவாகரத்து வேண்டும் என நிலா கேட்டார். இதன்பின், வீட்டிலிருந்து வெளியேறினார். நிலா வெளியேறிய சில நிமிடங்களிலேயே சோழனும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துவேலுக்கு ஆபரேஷன் முடிந்தது.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
நிலா தனது தோழியுடன் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்ட நிலையில், பல்லவன் நிலாவுக்கு கால் செய்து பேசினார். அப்போது, சோழன் அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்ட விஷயத்தை கூறவும், நிலா அதிர்ச்சியடைந்தார்.
பார்க்க வந்த நிலா
இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் காட்சிகள் குறித்து புரோமோ வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சோழனை பார்க்க ஓடி வருகிறார் நிலா. அங்கு நிலாவிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி தன்னுடன் இருக்குமாறு கேட்கிறார் சோழன்.

மேலும், பாண்டியன் மற்றும் சேரன் ஆகிய இருவரும் சோழனுக்கு கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு நிலாவிடம் கேட்கின்றனர். இப்படியொரு சூழலில் நிலா என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்.