இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த நடிகர் பப்லு.. ஆனால்
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் பப்லு. இவர் அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் பப்லுவிற்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பப்லு விளக்கம்
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பப்லு, மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. திரை வட்டாரத்தில் வேகமாக பரவிய தகவலை அறிந்த நடிகர் பப்லு இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

" நான் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக என்னிடம் எல்லோரும் போன் போட்டு கேட்டனர். நானும் அப்படியா என கேட்டேன். ஏதோ காமெடிக்காக என்னிடம் விளையாடுவதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இந்த செய்தி வைரலாகிவிட்டது.
இரண்டாவது திருமணம்
இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நிச்சயமாக இன்னொரு திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதை உங்களிடம் அறிவித்துவிட்டுதான் செய்வேன். திருட்டுத் தனமாக செய்ய மாட்டேன் " என இவ்வாறு கூறியுள்ளார். இதன்முலம் இரண்டாவது திருமணத்திற்கு பப்லு தயாராகியுள்ளார் என்று தெளிவாக தெரிகிறது.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri