மீம்களை பார்த்து பயமில்லை.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த கமல்! பூர்ணிமா மீதும் தாக்கு
பிக் பாஸ் ஷோ பார்க்கும் ரசிகர்கள் பலரும் கடந்த சில வாரங்களாக கமல்ஹாசனை தான் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பிரதீப் ரெட் கார்டு தொடங்கி, மாயா - பூர்ணிமாவுக்கு ஆதரவாக பேசுவது வரை பல விஷயங்களுக்காகக கமலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் இதை பற்றி இன்றைய எபிசோடில் கமல் பேசினார். "விமர்சனங்கள் constructive ஆக இருக்க வேண்டும். எனக்கு மீம்களை பார்த்து பயம் இல்லை. நான் தொகுப்பாளர் மட்டும் தான், போட்டியாளர் இல்லை".
"ஒரு விஷயத்தை பேசும் முன்பு நான் அதிகம் research செய்வேன். அதன் பிறகு தான் பேசுவேன்” என கூறினார் கமல்.

பூர்ணிமாவுக்கு நோஸ் கட்
மேலும் பூர்ணிமாவை விளாசிய கமல் 'உங்கள் கேமுக்கு நான் walking stick ஆக என்னால் இருக்க முடியாது. என்னை சேர்க்காமல் கன்டென்ட் கொடுங்க' என கமல் கூறி இருக்கிறார்.
கமல் நேரடியாக பூர்ணிமாவை விமர்சித்த நிலையில் அவர் அதன் பிறகு மாயாவிடம் கண்ணீர் விட தொடங்கிவிட்டார். முதல் முறையாக பிக் பாஸில் பூர்ணிமா அழுதிருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது கூறி வருகின்றனர்.
