15 வயதிலேயே தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளுக்கு இப்படியொரு சோகமா?- கலங்கிய பிரபலம்
தொகுப்பாளினி அர்ச்சனா
90 காலகட்டத்தில் இருந்தே தொகுப்பாளினியாக கலக்கி வருபவர். சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்து, கலைஞர், விஜய், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணிபுரிந்துவிட்டார்.
பிக்பாஸ் 4வது சீசனிற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பணியாற்றி வந்த அர்ச்சனா இப்போது மீண்டும் ஜீ தமிழ் பக்கமே சென்றுள்ளார்.
புதியதாக சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார், உடன் அவரது மகளும் தொகுப்பாளராக கலக்குகிறார்.
எமோஷ்னல் சாரா
அண்மையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளுடன் இணைந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சாரா பேசும்போது, நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்களே கிடையாது. நண்பர்கள் என்றால் எனக்கு என் அம்மா மட்டும் தான் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.
அர்ச்சனா இதற்கு, 15 வயதில் மீடியாவில் இருப்பதால் நண்பர்களே கிடையாது என்பது மிகப் பெரிய கஷ்டம், அதில் நியாயமே கிடையாது. ஆனால், அந்த கஷ்டத்தை அவள் பட்டிருக்கிறார். என்னிடம் வந்து அழுவார், நான் எப்போதும் அவளுக்கு நண்பராக இருப்பேன் என கலங்கியபடி அவரும் பேசியுள்ளார்.
நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்