குழந்தை இல்லாமல் பல ஆண்டுகள் கழித்து பிறந்த சென்ராயன் மகன்களா?- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்
தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து மேலே வந்தவர்கள் பலர் உள்ளார்கள். அப்படிபட்டவர்களின் லிஸ்டில் இருப்பவர் நடிகர் சென்ராயன்.
வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஜீவாவின் ரௌத்திரம் படத்தில் வில்லனாக நடித்தார், ஆனால் படம் சரியான ரீச் கொடுக்கவில்லை.
அதன்பிறகு சென்ராயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெரிய ரீச் கிடைத்தது.
அதிலும் நிகழ்ச்சியில் உறவினர்கள் வரும் எபிசோடில் அவரது மனைவி அப்பா ஆகிவிட்டதாக கூற அதற்கு சென்ராயன் கொடுத்த ரியாக்ஷன் இப்போதும் பேசப்படும்.
குழந்தைகள் புகைப்படம்
திருமணம் நடந்து பல வருடம் குழந்தைகள் இல்லை, இது அவருக்கு கடும் மன வேதனையை கொடுத்தது நிகழ்ச்சியில் நன்றாக தெரிந்தது. சென்ராயன் மனைவிக்கு சில ஆண்டுகள் முன் ஆண் குழந்தை பிறந்தது,
குழந்தைக்கு செமபியன் என பெயர் வைத்திருக்கிறார். அந்த குழந்தைக்கு பிறகு இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது சென்ராயன் தனது இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய சீரியல் நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்- இதனால் தான் விஷயமா?