நடிகர் பிரஷாந்த் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ள பெண்.. ஷாக்கிங் செய்தி
நடிகர் பிரஷாந்த்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகர் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது அந்தகன் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண மோசடி புகார்
இந்நிலையில், நடிகர் பிரஷாந்த் ரூ. 10 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக கூறி Switzerland விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் இலங்கையை சேர்ந்த குமுதினி என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.
இதை தொடர்ந்து குமுதினி என்ற பெண் தன் மீதி பொய் புகார் கொடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் நடிகர் பிரஷாந்த் தரப்பில் இருந்து புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரு தரப்பின் புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.