தேர்தல் விதிகளை மீறல்!! நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு..
தேர்தல்
நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று தனது வாக்கை செலுத்தினார். அப்போது அவருடைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அதனால் அந்த வாக்குச்சாவடியில் பதற்றம் நிலவியது.

வழக்கு பதிவு
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில். தேர்தலில் ஓட்டளிக்க நடிகர் விஜய் 200க்கும் அதிகமானவர்களுடன் வந்தார் என்றும், தேர்தல் விதிகளை மீறி நடிகர் விஜய் நடந்துகொண்டார் என்று சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu