தனது அடுத்த பட இயக்குனரை முன்வந்து பாராட்டிய தனுஷ் ! கவனத்தை பெறும் சாணி காயிதம்..
சாணி காயிதம் படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது.
இப்படத்தை முடித்த பின் தனுஷ் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
ஆனால் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகியுள்ள திரைப்படம் சாணி காயிதம், இப்படம் நேற்று அமேசான் பிரைம் வெளியாகி இருக்கிறது.
வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் குறித்து நடிகர் தனுஷும் பதிவிட்டுள்ளார். அதில் "அற்புதமான திரைப்படத்தை கொடுத்த சாணி காயிதம் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நல்ல வேலை செய்துள்ளீர்கள். அருண் மாதேஸ்வரன் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
Congrats to saani kaayidham team on a brutal brilliantly made revenge drama. Good job @selvaraghavan @KeerthyOfficial and all the other actors too..I’m very proud of you @ArunMatheswaran You are a visionary
— Dhanush (@dhanushkraja) May 6, 2022
அண்ணாத்த படத்தின் உண்மையான வசூலை வெளியிட்ட சன் டிவி ! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..