50 லட்சம் கடன், விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த்.. நன்றி மறந்தாரா விஜய்..
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு தரவில்லை.
விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த்
மேலும் கடுமையான விமர்சனங்கள் தான் இவருக்கு வந்தது. அந்த சமயத்தில் தனது மகனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக நடிகர் விஜயகாந்தை விஜய்யுடன் நடிக்க வைக்க முடிவு செய்தார் எஸ். ஏ. சந்திரசேகர்.

விஜயகாந்திடம் இதுகுறித்து கேட்டபோது அவரும் உடனடியாக ஓகே என கூறியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக இருந்த விஜயகாந்த், விஜய் படத்தில் சிம்பிளான ரோலில் நடித்தார்.
வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும், இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது. விஜயகாந்த் செந்தூரபாண்டி படத்தில் நடித்ததனால் விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நன்றி மறந்தாரா விஜய்
இந்நிலையில், விஜயகாந்திற்கு நெருக்கமானவர்களின் ஒருவர் மீசை ராஜேந்திரன். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'விஜய் பிரபலமாக காரணமாக இருந்தவர் விஜயகாந்த். என்னை சந்திக்கும்போது எல்லாம் கேப்டன் எப்படி இருக்கிறார் என விசாரிப்பார் விஜய். ஆனால், ஒரு முறை கூட அவரை நேரில் வந்து சந்திக்கவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது' என கூறியுள்ளார்.

தன்னை தூக்கி விட்டவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் விஜய் ஏன் நேரில் சென்று சந்திக்கவில்லை. நன்றி மறந்துவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அர்ஜுன் தூக்கி வைத்திருக்கும் இந்த டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..