ரஜினிக்காக இயக்குநர் எழுதிய கதை ! பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி கிளாசிக் ஹிட்டான திரைப்படம்..
ரஜினிக்காக எழுதிய கதை
டாப் நடிகர்களாக இருப்பவர்களுக்கு பல இயக்குநர்கள் கதையை அவர்களுக்காக உருவாக்குவது வழக்கம், அப்படி ரஜினிகாந்திற்காக உருவாக்கிய கதை பல நடிகர்கள் நடித்து வெளியாகியுள்ளதை பார்த்துள்ளோம்.
அப்படி ரஜினிக்காக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் எழுதிய கதை தான் அம்மன் கோவில் கிழக்காலே. மாபெரும் வெற்றியடைந்த அப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் ரஜினியை மனதில் வைத்து தான் எழுதினாராம்.

சில காரணங்களால் ரஜினியிடம் இப்படத்தின் கதையை அவரிடம் கூறமுடியவில்லை. இதனால் மீண்டும் விஜயகாந்தை வைத்து அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அப்போதை கிளாசிக் ஹிட்.
மேலும் ஆர்.சுந்தர்ராஜன் - விஜயகாந்த் கூட்டணியில் ஏற்கனவே வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள், அப்படம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்துடன் ரிலீஸாகி வெற்றியடைந்து இருக்கிறது.

வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் பெயர் மற்றும் கதாபாத்திரம் ! முதல்முறையாக வெளியான அப்டேட்