ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
இதில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள் தொடர்கள் டிஆர்பியின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
இந்த தொடர்களை தாண்டி சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. குணசேகரன் தனது மகன் தர்ஷன் திருமணத்தை தான் நினைத்தபடியே நடத்தி முடிக்க வேண்டும் என உறுதியாக உள்ளார்.
மகன் திருமணம் பற்றி பேச போன ஈஸ்வரியை கீழே தள்ளி கொடூரமாக நடந்துள்ளார் குணசேகரன்.
ஈஸ்வரி நிலைமை மோசமாக இருக்க ஜீவானந்தம் மருத்துவமனை வந்து விசாரிக்கிறார், தர்ஷனிடம் பார்கவி கனடா சென்றுவிட்டார் என ஜீவானந்தம் கூற அவர் ஷாக் ஆகிறார்.
தர்ஷினி கொற்றவையிடம் தனது அம்மாவின் இந்த நிலைக்கு காரணம் குணசேகரன் தான் என கூறி புலம்புகிறார்.
You May Like This Video