பருத்திவீரன் பிரச்சனை.. வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஞானவேல் ராஜா..

By Kathick Nov 29, 2023 05:40 AM GMT
Report

பருத்திவீரன் பிரச்சனை

கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து இருந்தாலும் கூட அப்போது ஆரம்பித்த பிரச்சனை தற்போது வரை நீடித்து கொண்டே தான் இருக்கிறது.

பருத்திவீரன் இயக்குனர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே ஏற்பட்ட பண பிரச்சனை குறித்து தொடர்ந்து பலரும் பேசி வருகிறார்கள். இதில் பலரும் அமீர் பக்கம் தான் நியாயம் இருக்கிறது.

பருத்திவீரன் பிரச்சனை.. வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஞானவேல் ராஜா.. | Gnanavel Raja Apologizes Statement

ஞானவேல் ராஜா சொல்வது பொய்யான விஷயம் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல்

லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல்

அறிக்கை

இந்த அறிக்கையில் "பருத்திவீரன் படத்தின் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது. இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன். ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் நெருங்கிய பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது".

பருத்திவீரன் பிரச்சனை.. வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஞானவேல் ராஜா.. | Gnanavel Raja Apologizes Statement

"அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US