நம்மை சிரிக்க வைத்த நடிகர் கவுண்டமணியா இது, இப்படி நடக்கிறாரே?- வீடியோ பார்த்து சோகத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் 1964ம் ஆண்டு திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் கவுண்டமணி. நக்கல் நாயகன் என்ற பெயர் ரசிகர்கள் இவருக்கு செல்லமாக வைத்த ஒரு பெயர்.
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு காமெடி ஜாம்பவனாக திகழ்பவர் இவர். கவுண்டமணி-செந்தில் என்று கூறினாலே ஏகப்பட்ட காமெடிகள் நியாபகத்தில் வந்து நிற்கும், அந்த அளவிற்கு இவர்கள் இருவருமே சினிமாவில் பெரிய பங்கு வகித்துள்ளனர்.
கவுண்டமணியின் பயணம்
இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காமெடி நடிகராக இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியை ரசிகர்கள் அந்த காலத்து அஜித் என்று கூறுவார்கள்.
காரணம் ரசிகர் மன்றத்தை அப்போதே கலைத்தவர், அதிகம் பேட்டிகள் கொடுத்தது இல்லை.
நடிகரின் தற்போதைய நிலை
நடிகர்கள் அதாவது கரகாட்டக்காரன் கூட்டணி பிரபலங்கள் கவுண்டமணி, செந்தில், ராமராஜன் 3 பேரும் ஒரு திருமண விழாவிற்கு வந்துள்ளார்கள். அதில் நடிகர் கவுண்டமணியை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு கூட்டி வருகிறார்.
சினிமாவில் சட்சட்டென்று நடந்து பார்த்த கவுண்டமணியை இப்போது ஒருவர் கையை பிடித்து கூட்டி வருவதை பார்த்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளன்ர்.
விஜய்யின் 66வது படத்தில் இவரா விஜய்யுடன் நடிக்கப் போகிறார்?- புதிய கூட்டணி

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
