திருமணத்திற்கு பின் இது ஒன்று மட்டும் தான் மாறி இருக்கு! - ஹன்சிகா
ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வாணி அவரது காதலர் Sohael Khaturiyaவை கடந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற்றது.
பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவது போல நான் செய்யமாட்டேன், தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா முன்பே கூறி இருந்தார்.
சென்னை ஏர்போர்ட்டில் பேட்டி
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று ஹன்சிகா சென்னைக்கு வந்திருக்கிறார். தனது புது படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்திருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு சென்னையில் தான் இருக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார்.
அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விக்கும் பதில் அளித்தார். திருமணத்திற்கு பிறகு என்ன மாறி இருக்கிறது என கேட்டதற்கு, 'எதுவும் மாறவில்லை, என் கையில் ஒரு மோதிரம் வந்திருக்கிறது அவ்வளவு தான்' என ஹன்சிகா கூறி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷுக்கு அவருடன் திருமணமா? முதல்முறையாக வாய்திறந்த அம்மா மேனகா