மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. கமல் அதிரடி! நீதிமன்றம் எடுத்த முடிவு
நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அதற்கு தடை போடப்பட்டு இருக்கிறது.
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் தக் வெளியிட விடுவோம் என சில அமைப்புகள் அங்கே போராட்டம் நடத்தின. தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மன்னிப்பு கேட்க முடியாது
நீதிமன்றமும் கமல் மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என கண்டிஷன் போட்டது. அதனால் கமல் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் தனது பேச்சு தவறாக புரியுந்துகொள்ளப்பட்டு இருக்கிறது என கூறி இருந்தார்.
ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என நீதிபதி கேள்வி எழுப்ப, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல் கூறி இருக்கிறார்.
பிலிம் சேம்பர் மற்றும் கர்நாடக அரசுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடன்பாடு எட்டும் வரை தக் லைப் ரிலீஸ் ஆகாது என நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் தக் லைப் ரிலீஸ் கர்நாடகத்தில் தள்ளிவைக்கப்படுவதாகவும் அவர் கூற, வழக்கு அடுத்த விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri

பிரித்தானிய குடிமக்களின் வரிப்பணத்தில் வாழும் 1.3 மில்லியன் புலம்பெயர்ந்தோர் - நிதியை நிறுத்த தலைவர்கள் அழுத்தம் News Lankasri
