வெங்கடேஷ் பட், தாமுவை தொடர்ந்து குக் வித் கோமாளியில் இருந்து இவர்களும் வெளியேறினார்கள்- அதிகாரப்பூர்வ தகவல்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசன் வனிதா, இரண்டாவது சீசன் கனி, 3வது சீசன் ஸ்ருதிகா, 4வது சீசன் மைம் கோபி என வெற்றியாளராக தேர்வாகியுள்ளனர்.
பிக்பாஸ் 7வது சீசன் முடிந்த கையோடு இப்போது மக்கள் குக் வித் கோமாளி 5வது சீசனிற்காக தான் வெயிட்டிங். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குள் நிறைய ஷாக்கிங் தகவல்கள் ரசிகர்களுக்கு வருகிறது.
புதிய தகவல்
இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களுக்கும் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருந்து வந்தார்கள், நிகழ்ச்சியை கலகலப்பாகவும் கொண்டு சென்றார்கள்.
ஆனால் 5வது சீசனில் அவர்கள் இல்லையாம், இதனை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இந்த நிலையில் இதுவரை 4 சீசன்களை தயாரித்து வந்த Media Mason இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரிக்க போவதில்லை.
அதேபோல் Mr & Mrs சின்னத்திரையையும் இவர்கள் தயாரிக்க போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அடுத்தடுத்து குக் வித் கோமாளி ஒவ்வொருவராக வெளியேறுவது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
You May Like This Video

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
