சூர்யாவின் ஜெய் பீம் பட இயக்குனரின் அடுத்தப்படம்- சர்ச்சை கதைக்களம்
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை, ஆனால் இப்படத்திற்கு முன் வெளியாகி இருந்த ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.
சூரரைப் போற்று படத்திற்காக தற்போது சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது, அதோடு அப்படத்திற்காக 5 விருதுகள் கிடைத்துள்ளன.
அப்படத்தை தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படம் வெளியானது, இப்படத்தை ஞானவேல் அவர்கள் இயக்கியிருந்தார்.
இப்படம் சில அரசியல்வாதிகளால் சர்ச்சையாக பேசப்பட்டது, ஆனால் படம் வெற்றிகரமாக ஓடி இருந்தது.

அடுத்த படம்
ஜெய் பீம் படம் மூலம் வெற்றிகண்ட டிஜே ஞானவேல் அடுத்தும் ஒரு சர்ச்சை கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தென்னிந்தியாவில் பிரபலமான ஹோட்டல்களை நடத்தி வந்த ஒருவர் கடைசியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் கதையை இயக்க இருக்கிறாராம்.
வசூல் வேட்டை நடத்திய பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri