காசை திருப்பி தருகிறேன்.. ட்ரோல் காரணமாக நடிகர் கமல் எடுத்த முடிவு!
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தற்போது திமுக உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டார். திமுக கொடுக்க முன்வந்த தொகுதிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அந்த முடிவை எடுத்ததாக கமல் கூறினார்.
தேர்தலில் போட்டியில்லை என அவர் அறிவித்ததால் அவர் சொந்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் நிலை என்ன என விமர்சனங்கள் எழுந்தது.
60 பேர் கட்டிய விருப்ப மனு தொகையை திருப்பி தர முடியாது, அது கட்சி நிதிக்கு சென்றுவிட்டது என கமல் தெரிவித்து இருந்தார். இதுவும் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.
திருப்பி பெறலாம்
இந்நிலையில் ட்ரோல்கள் காரணமாக கமல் தற்போது புது முடிவை எடுத்திருக்கிறார்.
விருப்ப மனுவுக்கு அளித்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.