நடிகர் கஞ்சா கருப்புக்கு இப்படியொரு நிலைமையா?- சொந்த வீடு போனதா?
கஞ்சா கருப்பு
கறுப்பு ராஜா என்ற தனது உண்மையான பெயரை சினிமாவிற்காக மாற்றி மதுரையில் இருந்து நடிக்க வந்தவர் தான் கஞ்சா கறுப்பு.
பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் நடித்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக அவர் நடிக்க அதுவே அவருக்கான பட்டப்பெயராக அமைந்துவிட்டது.
அப்படத்திற்கு பிறகு ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

தயாரித்த படம்
இப்படி தொடர்ந்து படங்கள் நடிக்க 2013ம் ஆண்டு கஞ்சா கறுப்பு வேல்முருகன் போஸ்வெல் என்ற படத்தை தயாரித்தார், இப்படம் வந்தது கூட யாருக்கும் தெரியவில்லை. இப்படத்தால் சொந்த வீட்டை விற்று இப்போது சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் கஞ்சா கறுப்பு, சென்னையில் தான் இப்போது இருக்கிறேன். என்னுடைய பழைய வீடான பாலா–அமீர் இல்லத்தை கொடுத்து விட்டேன். இப்போ மாதம் 30,000 ரூபாயில் வாடகை வீட்டில் இருக்கிறேன்.
30,000 வீடு போனாலும் வாடகை வீட்டில் சந்தோஷமாகத்தான் நான் இருக்கிறேன். தற்போது நான் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

நடிகர் சந்தானமா இது, என்ன இப்படி ஆளே மாறிவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்