காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு முடிந்தபின் நடிகர் மரணம்.. வருத்தத்துடன் படக்குழு செய்த விஷயம்
காந்தாரா
காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 340+ கோடி வசூல் செய்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர்.
ராகேஷ் பூஜாரி
காந்தாரா சாப்டர் 1 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் ராகேஷ் பூஜாரி. இவர் காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு முடிந்து 20 நாட்களுக்கு பின், மாரடைப்பால் இறந்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக தனது நண்பரின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டபோது இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தின் துவக்கத்தில் படக்குழு இரங்கல் தெரிவித்து இவருடைய புகைப்படத்தை போட்டிருந்தனர்.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
