கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: கையெழுத்து போட தயாரான ரேவதி.. கார்த்திக் செய்யப் போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பேசும் தமிழில் பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரியை சந்தித்த ரேவதி, அவர் விரும்பியபடியே கையெழுத்து போட்டு தர சம்மதம் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிய வந்ததும் ராஜராஜன் கடும் கோபமடைகிறார். "சாமுண்டீஸ்வரி இப்படி செய்தால் ரேவதி வேறு என்ன முடிவு எடுப்பார்?" என்று வருத்தப்படுகிறார். அதே நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரேவதியை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

அப்பத்தாவுக்கு எதிராக ஒன்று கூடும் அம்மாக்கள், நடக்கப் போவது என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து, ரேவதி கையெழுத்து போட ஒப்புக்கொண்ட செய்தியை உற்சாகமாக தெரிவிக்கிறார். இதைக் கேட்ட சிவனாண்டி மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நம்ம திட்டம் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிச்சிருக்கு... இனிமேல் எல்லாமே நம்ம பக்கம் தான்!" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
அடுத்த நாள், சாமுண்டீஸ்வரியை சந்திக்க ரேவதி கிளம்பத் தயாராகிறார். வீட்டில் பாட்டி மட்டும் இருப்பதால் என்ன சொல்லி வெளியே போவது என்று குழப்பமடைகிறார். முதலில் பொய் சொல்லிவிட்டு கிளம்பலாம் என நினைக்கிறார். ஆனால் அவரால் பொய் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இறுதியில், உண்மையை பாட்டியிடம் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட பாட்டி, ரேவதியை வெளியே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் ரேவதி தனது முடிவில் உறுதியாக இருந்து அங்கிருந்து கிளம்பி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு சாமுண்டீஸ்வரி தேவையான ஆவணங்களுடன் ரேவதிக்காக காத்திருக்கிறார். ரேவதி உண்மையிலேயே கையெழுத்து போடுவாரா? இதை தடுக்க கார்த்திக் எந்த முடிவை எடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது.

கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு, உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த பரபரப்பான எபிசோடை காண தவறாதீர்கள்!