ஏர்போர்ட் வந்த நடிகர் கருணாஸ்.. கைப்பையில் வைத்திருந்த பொருளால் சிக்கினார்
நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து அதன் பின் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். அவர் அரசியல் கட்சி தொடங்கி தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கருணாஸ் இன்று சென்னை விமான நிலையம் வந்தபோது அவர் பையை போலீசார் சோதித்த போது ஒரு அதிர்ச்சி கிடைத்து இருக்கிறது.

துப்பாக்கி குண்டுகள்
கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பெட்டிகளில் தலா 20 குண்டுகள் இருந்திருக்கியது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடடினார்கள்.
தான் லைசன்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்திருக்கும் நபர் என்றும், அதில் பயன்படுத்தும் குண்டுகள் தான் அவை என்றும் கருணாஸ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார்.
அவசரமாக வந்ததால் அந்த குண்டுகள் பையில் இருப்பதை கவனிக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார். இருப்பினும் அதிகாரிகள் கருணாஸை திருச்சி செல்லும் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.

ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri