பக்கா மாஸ் ஹீரோவாக மாறிய லெஜண்ட் சரவணன்.. கருடன் இயக்குனருடன் அதிரடி கூட்டணி
லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் சரவணன் அருள். முதல் படத்திலேயே மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாம் படத்தின் அறிவிப்பு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என கூறியிருந்தார். இயக்குனர் துரை செந்தில் குமாருடன் தான் லெஜண்ட் சரவணன் இணையப்போகிறார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.
மாஸ் ஹீரோ
இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் - துரை செந்தில் குமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குனர் துரை செந்தில் குமார் பகிர்ந்துள்ளார்.
இதில் லெஜண்ட் திரைப்படத்தில் பார்த்தது போல் இல்லாமல், பக்கா ஆக்ஷன் ஹீரோவாக ஆளே மாறிப்போய் இருக்கிறார் நடிகர் லெஜண்ட் சரவணன். இதோ அந்த புகைப்படங்கள்..
#shootingmode #mynext #legendsaravanan #kickstarted pic.twitter.com/v3OKB3Fjdk
— durai senthilkumar (@Dir_dsk) June 24, 2024



சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu