ரஜினி - கமல் படத்தில் இருந்து வெளியேறியது இதனால் தான்.. லோகேஷ் கனகராஜ் போட்டுடைத்த உண்மை

By Parthiban.A Jan 26, 2026 10:08 AM GMT
Report

கூலி படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறார் என கூலி ஷூட்டிங் நேரத்திலேயே தகவல் வந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து லோகேஷ் திடீரென வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு சுந்தர்.சி அந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்படாதது. அவருக்கு இரண்டு நாளில் வெளியேறிவிட்டார்.

அடுத்து டான் பட புகழ் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். அந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

ரஜினி - கமல் படத்தில் இருந்து வெளியேறியது இதனால் தான்.. லோகேஷ் கனகராஜ் போட்டுடைத்த உண்மை | Lokesh Kanagaraj Reveal Why He Quit Thalaivar 173

லோகேஷ் கனகராஜ் போட்டுடைத்த உண்மை

இந்நிலையில் ரஜினி - கமல் படத்தில் இருந்து தான் வெளியேறியது ஏன் என்கிற காரணத்தை லோகேஷ் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

கைதி 2 படத்தை விட்டுவிட்டு ரஜினி - கமல் படத்திற்காக வந்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவர் சொன்ன கதை பிடித்தாலும், அது வேண்டாம் ஒரு லைட் ஹார்ட்டட் படம் தான் வேண்டும் என ரஜினி - கமல் இருவரும் கூறினார்களாம்.

அந்த மாதிரி படம் என்னால் பண்ண முடியாது என கூறிவிட்டு லோகேஷ் வெளியேறிவிட்டாராம். அதன் பிறகு தான் லோகேஷ் தற்போது அல்லு அர்ஜுன் படத்தில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US