எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வனில் இரட்டை கதாபாத்திரங்களா! சுவாரஸ்ய தகவல்
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தீவிரமாக நடந்த இப்படத்தின் ப்ரோமோஷனை தொடர்ந்து ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படம் முதல் நாளிலே பெரிய வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர்
இதனிடையே பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் வெவ்வேறு கால கட்டங்களில் முயற்சி செய்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அப்படி எல்லோரும் அறிந்த விஷயம் பொன்னியின் செல்வன் படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தது. ஆனால் அவர் ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்க முடியாமல் போனது.
மேலும் அவர் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாகவும், அருண்மொழிவர்மனாகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பியுள்ளார் எம்.ஜி.ஆர்.
"நானே வருவேன்" முதல் விமர்சனம் இதோ

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
