Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய ஜோடி.. கவலையில் பிரபலங்கள்
Mr. And Mrs. சின்னத்திரை 4
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Mr. And Mrs. சின்னத்திரை. இதன் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி, மகாலிங்கம் - ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் - சுகன்யா, ரஹ்மான் - ஃபரிணா, மதன் - ரேஷ்மா, யோகி - சத்யா, பிரவீன் - ஐஸ்வர்யா, ராம் - ஜானு, ஸ்ரீகுமார் - அணிலா, வசந்தகுமார் - ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்த வார எலிமினேஷன்
இதில் அஜய் கிருஷ்ணா - ஜெஸி ஜோடி அவர்களே நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டனர். அதன்பின் நடந்த எலிமினேஷன் சுற்றில் யோகி - சத்யா ஜோடி எலிமினேட் ஆனார்கள்.
இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற Mr. And Mrs. சின்னத்திரை எலிமினேஷன் சுற்றில் நடிகை அணிலா - ஸ்ரீகுமார் ஜோடி எலிமினேட் ஆகியுள்ளார்கள். நடிகை அணிலா விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரபாகி வரும் பாவம் கனேசன் சீரியலில் நடித்து வருகிறார் என்பதும், இதற்குமுன் சின்னத்தம்பி சீரியலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது மற்ற போட்டியாளர்களுக்கு கவலையை தந்துள்ளது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri