சீதா ராமம் படத்தின் வெற்றி.. கோடியில் சம்பளத்தை உயர்த்திய கதாநாயகி
முருநல் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் முருநல் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இவர் பாலிவுட்டில் வெளிவந்த சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் சீதா ராமம் திரைப்படம் தான் இவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஏன், பல பேர் தன்னுடைய க்ரஷ் முருநல் தாகூர் தான் என்று வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் முருநல் தாகூர் இடம் பிடித்துள்ளார்.
சம்பளத்தை உயர்த்திய நடிகை
இந்நிலையில், சீதா ராமம் வெற்றியின் காரணமாக இனி அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம் நடிகை முருநல் தாகூர். இந்த தகவல் தற்போது திரையுலகினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.