வடிவேலு திமிரு பிடிச்சவன்னு பேசுறாங்க.. வைகைப்புயல் கொடுத்த பதிலடி! முழு பேட்டி
நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் நிலையில் தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலமாக கம்பேக் கொடுக்க இருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் நிலையில் வடிவேலு சினியுலகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தன்னை பற்றி தவறாக பேசும் நபர்கள் பற்றி அவர் கூறி இருக்கிறார்.
தவறாக பேசுபவர்களுக்கு பதிலடி
தன்னிடம் வந்து இயக்குனர்கள் கதை சொல்லும்போது கதை பிடிக்காமல் நான் டேட் கொடுக்கவில்லை என்றால் வெளியில் சென்று தவறாக பேசுகிறார்கள். வடிவேலுக்கு ரொம்ப திமிரு, ப்பா என்னா ஆட்டம், என்னா கொழுப்பு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
ஜனங்க சிரிக்கனும், அதனால் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன், நல்ல கதையாக இருந்தால் நடிக்கிறேன், அந்த பொறாமையில் தான் இப்படி என்னை பற்றி பேசுகிறார்கள் என வடிவேலு கூறி இருக்கிறார்.
மேலும் தனக்கு 6 மாத குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள், அது போதும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
முழு பேட்டி வீடியோ இதோ
பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி வாங்கிய மொத்தம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?