ஷங்கர், லோகேஷ், அட்லீயை மிஞ்சிய நெல்சன்.. ஒரே ஒரு மாபெரும் வெற்றியால் சம்பளத்தில் உச்சத்திற்கு சென்ற இயக்குனர்
நெல்சன்
ஒரே ஒரு படத்தின் மூலம் ஒருவர் தன்னுடைய கெரியரில் உச்சத்திற்கு சொல்லமுடியுமா? முடியும் என காட்டியுள்ளார் நெல்சன்.
ஆம், பீஸ்ட் தோல்விக்கு பின் சற்று பின்னடைவை சந்தித்து இருந்தாலும், ஜெயிலர் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல திரையரங்கில் நெல்சன் வாண்டட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்.
ஜெயிலர் வெற்றியின் காரணமாக சம்பளத்தையும் தாண்டி ரூ. 5 கோடியும், ஒரு காரும் கலாநிதி மாறன் பரிசாக கொடுத்துள்ளார். ஆனால், இதையெல்லாம் விட அடுத்ததாக மற்றொரு புதிய பரிசையும் கொடுக்கவிருக்கிறார்.
ஆம், ஜெயிலர் 2 திரைப்படம் எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். கண்டிப்பாக ஜெயிலர் 2 வரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
உச்சத்திற்கு சென்ற நெல்சன்
மேலும், இப்படத்தில் இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமா இயக்குனரும் வாங்காத அதிக சம்பளத்தை நெல்சன் திலீப்குமாருக்கு கொடுக்க தயாரிப்பு நிருவனம் முடிவு செய்துள்ளதாம்.
ஜவான் படத்திற்காகவே இயக்குனர் அட்லீ ரூ. 50 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், அவர் தான் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் என கருதப்பட்டார். தற்போது அதையும் விட அதிகமான சம்பளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு கொடுக்க சன் பிச்சர்ஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுத்திறது.