ஜீ தமிழின் வீரா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள இளம் நடிகை... யார் தெரியுமா?
வீரா சீரியல்
வைஷ்ணவி மற்றும் அருண் புதிய ஜோடியாக இணைந்து ஜீ தமிழின் வீரா சீரியலில் நடித்து வந்தனர்.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
சீரியலை தாண்டி வீரா-மாறன் ஜோடிக்கு ரசிகர்கள் உள்ளார்கள், நிறைய இன்ஸ்டா பக்கங்களும் இந்த சீரியல் ஜோடிக்காக உள்ளனர்.

நாயகியின் அப்பா நாயகனால் விபத்தில் இறக்கிறார். ஒருகட்டத்தில் வீராவும் மாறனும் திருமணம் செய்துகொள்ள நாயகியின் அக்காவோ மாறனை பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்.
இதை வைத்தே கதையின் கரு சென்று கொண்டிருக்கிறது.
புதிய என்ட்ரி
சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்க இப்போது புதிய என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது நடிகை பிரணிகாதக்ஷு வீரா சீரியலில் புதிய என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
ஆனால் அவரது கதாபாத்திரம் என்ன, பெயர் என்ன என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.