ஜீ தமிழில் ஆல்யா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியலில் இனி நடிக்கப்போகும் புதிய ஹீரோ யார் தெரியுமா?
பாரிஜாதம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் பாரிஜாதம், இந்த சீரியலில் ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதில் ஹீரோவாக ரக்ஷித் என்பவர் விஷால் கேரக்டரில் நடித்து வந்தார். சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் நாயகன் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
அவர் ஏன் இந்த திடீர் முடிவு எடுத்தார், காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த சீரியலில் வாய்ப்பு கொடுத்ததற்காக அனைவருக்கும் நன்றி கூறி ஒரு பதிவு போட்டிருந்தார்.

புதிய நாயகன்
ரக்ஷித் வெளியேறிய பின் விஷால் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது சூப்பர் தகவல் வந்துள்ளது.
புதியதாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் நாயகனாக இனி அக்ஷய் கமல் தான் நாயகனாக நடிக்க உள்ளாராம்.