300 கிலோ போதைப்பொருள் வழக்கு.. நடிகை வரலக்ஷ்மிக்கு சம்மன்
வரலட்சுமி நடிகர் சரத்குமாரின் மகள் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர். சிம்பு ஜோடியாக போடா போடி படத்தில் நடித்த அவர் அதற்கு முன்பு பாய்ஸ் உள்ளிட்ட பல பட வாய்ப்புகள் மிஸ் செய்திருக்கிறார்.
வில்லி ரோல் தொடங்கி எந்த விதமான ரோலாக இருந்தாலும் வரலட்சுமி சரத்குமார் தைரியமாக நடித்து வருகிறார். அதற்காகவே அவருக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது ஹைதராபாத்தில் புது வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கும் வரலட்சுமி தனது உடல் எடையையும் அதிக அளவு குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார். அவர் திடீரென ஒல்லி ஆனது அவரது ரசிகர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது வரலட்சுமிக்கு ஒரு புது சிக்கல் வந்திருக்கிறது.
போதைப்பொருள்.. சம்மன்
கேரளாவில் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தொடர்புடையவர்களை தற்போது NIA அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வரலட்சுமி உதவியாளராக இருந்த ஆதிலிங்கம் என்ற நபரை NIA அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் வரலட்சுமிக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை பற்றி விசாரணை நடத்த தற்போது வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
தற்போது ஆந்திராவில் தான் ஷூட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் விசாரணைக்கு வந்து கலந்து கொள்வதாகவும் கூறியிருக்கிறாராம் வரலக்ஷ்மி.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்.. நான் இதை தான் செய்தேன்: அனு இம்மானுவேல்