நடுரோட்டில் செம கோபத்தில் செந்திலை கடுமையாக திட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதைக்களமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. கதையில் கடந்த சில நாட்களாக சரவணன்-மயில் விவாகரத்து பிரச்சனை தான் பரபரப்பாக பேசப்பட்டது.
சரவணன சொன்ன வார்த்தையால் மயில் கதறி கதறி அழுதுகொண்டே இருக்கிறார். பின் கடைசியில் இனி சரவணன் வேண்டாம், நான் கர்ப்பமாக இருப்பதையும் யாரிடமும் கூற வேண்டாம், என் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன் என முடிவு எடுக்கிறார்.

கடைசி எபிசோடில், சரவணன்-அஞ்சலியுடன் கடையில் இருப்பதை மயில் பார்த்து மிகவும் வருந்துகிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், ராஜி-கதிர் காட்சிகள் காட்டப்படுகிறது. இருவரும் ஐஏஎஸ் தேர்வு குறித்து பேசுகிறார்கள். கதிர் அதற்காக நீ ஏதாவது முயற்சி செய்துள்ளாயா என கேட்க அவரின் கேள்வியால் ராஜி கோபமடைகிறார்.
காலையில் கதிர் எழுந்து பார்க்கும் போது தன் அருகில் படுத்திருந்த ராஜியை காணவில்லை. உடனே ஷாக் ஆன கதிர் வீட்டில் தேட பிறகு தனது அம்மாச்சி ராஜி காலையிலேயே வெளியே சென்றுவிட்டார் என்கிறார்.

காலையிலேயே வெளியே சென்றுவிட்டாளா என கதிர் உடனே கிரவுண்டுக்கு செல்கிறார். அங்கு ராஜி ஒட்டப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார், அதைப்பார்த்து கதிர் வாயடைத்துப் போகிறார்.
கடைசியாக, மயில் மீனாவை சந்தித்து சரவணனை பெண்ணுடன் பார்த்த விஷயத்தை கூறி அழுகிறார்.

மீனா அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க உடனே செந்தில் அங்கு வருகிறார். மீனா மயில் சொன்ன விஷயத்தை நினைத்து செந்திலை பார்த்து இந்த ஆண்கள் எல்லாம் மோசம், ஒரு பெண் பிரிந்தால் உடனே இன்னொரு பெண்ணை தேடிச் சென்றுவிடுவது.
நீங்களும் அப்படி தான் என செந்திலை கோபமாக திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri