முதல் படம் என்ன ஆச்சு? பரிதாபங்கள் கோபி, சுதாகர் கொடுத்த விளக்கம்
கோபி சுதாகர்
தற்சமயத்தில் youtubeல் பாப்புலராக இருக்கும் பிரபலங்கள் தான் டிவி மற்றும் சினிமாவில் எளிதில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
அப்படி பரிதாபங்கள் என்ற சேனல் மூலம் பெரிய அளவில் பிரபலமாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இது அவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் என குறிப்பிட்டு இருந்தனர்.

முதல் படம் என்ன ஆச்சு
2019ல் பரிதாபங்கள் டீம் crowdfunding முறையில் ஒரு படத்தை தொடங்கினார்கள். மணி கம்ஸ் டுடே கோஸ் டுமாரோ யா என அந்த படத்திற்கு பெயர் வைத்து அவர்கள் பணிகளை தொடங்கிய நேரத்தில் கொரோனா லாக்டவுன் வந்ததால் நிறுத்திவிட்டனர்.
அதன் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் அதை நிறுத்திவிட்டு அப்படியே இப்போது இரண்டாம் படத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்து உள்ளனர். அந்த படத்திற்கு கோ-பிரோடயூசர் கிடைத்தால் நிச்சயம் தொடங்குவோம் என கோபி-சுதாகர் கூறி இருக்கின்றனர்.
முதல் படத்திற்கு பணம் கொடுத்தவர்களுக்கு கைமாறாக தான் இந்த படத்தை எடுப்பதாகவும் கூறி இருக்கின்றனர். முதல் படம் ப்ரீ-ப்ரொடக்ஷன் மட்டுமே நடந்தது, ஷூட்டிங் போகவே இல்லை எனவும் கூறி இருக்கிறார்கள்.

Bigg Boss 6 டைட்டில் ஜெயித்த அஸீம்! 50 லட்சத்தோடு இப்படி ஒரு பெரிய பரிசா
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri