நடிகர் ஷாருக்கான் மனைவி மீது பாய்ந்தது FIR.. அதிர்ச்சியில் திரையுலகம்
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் பதான் படத்தில் திரைப்படம் வெளியாகி ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த பாலிவுட் பதான் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தது.

பண மோசடி
மும்பையைச் சேர்ந்த கிரத் ஜஸ்வந்த் ஷா என்பவர் துல்சியானி கோல்ஃப் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்காக முன்பணமாக ரூபாய் 82 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை வாங்கிவிட்டு துல்சியானி கோல்ஃப் நிறுவனம் ஏமாற்றிவிட்டதாம். இந்த நிறுவனத்தின் அம்பாசிடர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான்.

FIR
இதனால் போலீசில் புகார் அளித்த கிரத் ஜஸ்வந்த் ஷா," நான் இந்த பிளாட்டை வாங்குவதற்கு காரணம் கவுரி கான். அவர் விளம்பரத்தில் நடித்த பிறகு தான் எனக்கு இந்த எண்ணம் வந்தது" என்று கூறியுள்ளார்.
இது குறித்து பதில் அளிக்காமல் இருந்த கவுரி கான் மீது தற்போது போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நான் லெஸ்பியனா? மோசமாக பேசுபவர்களுக்கு விஜய் டிவி ஜாக்குலின் ஆவேச பதிலடி