தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்- கணிப்பின் விவரம் இதோ
பொன்னியின் செல்வன்
இந்திய சினிமாவே மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
எல்லா மொழிகளிலும் படக்குழு சென்று படத்தை புரொமோட் செய்து வருகிறார்கள். அண்மையில் படக்குழு டெல்லி சென்றுள்ளனர், அங்கும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
தனித்தனியாகவும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள், அதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் எவ்வளவு வசூலிக்கும் என்ற எண்ணம் இப்போதே தொடங்கிவிட்டது.
முதல் நாள் கலெக்ஷன்
படத்திற்கான டிக்கெட் புக்கிங் தாறுமாறாக நடந்து வருகிறது, அனைவரும் வியந்து பார்க்கின்றனர். தற்போது தமிழகத்தில் டிக்கெட் புக் ஆவதை வைத்து பார்க்கையில் படம் முதல் நாளில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்யும் என்கின்றனர்.
நடிகர் வடிவேலுவின் தம்பி சிம்புவுடன் நடித்துள்ளாரா?- எந்த படத்தில் தெரியுமா?