ஒவர்சீஸ் நாட்டில் இதுவரை இல்லாத வசூல் சாதனையை படைக்கவுள்ள பொன்னியின் செல்வன்! 10,000 டிக்கெட்ஸ்-ஆ?
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படம் முதல் நாளிலே ரூ. 25 கோடிக்கும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் மட்டும் 10.5 K டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ளதாம், இதை வைத்து இதுவரை முதல் நாளில் அங்கு எந்த ஒரு தமிழ் திரைப்படமும் படைக்காத சாதனையை பொன்னியின் செல்வன் படைக்கும் என சொல்லப்படுகிறது.
இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்