ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் மட்டுமே பொன்னியின் செல்வன் இவ்வளவு வசூல் செய்துவிட்டதா?
பொன்னியின் செல்வன்
தமிழர்களுக்கே பெருமையான ஒரு நாவல் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். கல்கி அவர்கள் எழுதிய இந்த கதையை கோடிக் கணக்கான மக்கள் படித்துள்ளார்கள், ஆடியோவாக கேட்டுள்ளார்கள்.
பெருமைக்குரிய இந்த நாவலை படமாக இயக்க வேண்டும் என பலருக்கு ஆசை இருந்தது, அந்த ஆசை, கனவு எல்லாம் மணிரத்னம் அவர்களுக்கு நடந்துள்ளது. வெற்றிகரமாக அவரும் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிவிட்டார்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி பிரம்மாண்டத்தின் உச்சமாக படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
படக்குழு சென்னை, கேரளா என படத்தை புரொமோட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், அந்நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
ப்ரீ புக்கிங்
தற்போது படம் ரிலீஸ் தேதியை நெருங்கி வரும் நிலையில் புக்கிங் படு வேகமாக நடக்கிறது. USAவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே $375K வந்துள்ளதாக கூறப்படுகிறது.
#PS1 $375K adv booking in USA 🇺🇸 Till now.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) September 23, 2022
பிரபல தொகுப்பாளினி பெப்ஸி உமா சினிமாவை விட்டு விலக இதுதான் காரணமா?