பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தளபதி விஜய்! இயக்குநர் முருகதாஸ் சொன்ன சுவாரஸ்ய தகவல்
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
திரையுலகமே எதிர்பார்த்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்டமாக நேற்று நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து இணையதள முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய்யின் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்கவிருந்தது குறித்த தகவல்களை பரப்பி வருகின்றனர்.

விஜய்
அதன்படி இயக்குநர் முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில் 2012-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் உருவாக்கவிருந்தார். அப்போது அதில் விஜய், விக்ரம், மகேஷ் பாபு உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர்.
பின் அப்படம் கைவிடப்பட்டதால் அப்படத்திற்கான தேதி இயக்குநர் முருகதாஸிற்கு கிடைத்தால் துப்பாக்கி படம் இயக்கியதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகருடன் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி சுசித்ரா