90களில் முன்னணி நாயகனாக வலம்வந்த நடிகர் தருணா இது?.. அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே...
நடிகர் தருண்
தருண் குமார், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்த ஒரு நடிகர்.
தெலுங்கை தாண்டி தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி (1990) படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன்பின் தளபதி, ஆதித்யா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
பின் 2000ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான நூவ்வே காவலி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18, புன்னகை தேசம், காதல் சுகமானது, இவன் யாரோ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான்
லேட்டஸ்ட்
அவரது காலகட்டத்தில் பல ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்த இடையில் சினிமா பக்கமே வராமல் இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கியவர் கிடைக்கும் படங்களில் நடிக்கிறார்.
42 வயதாகும் தருண் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரா அது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
