வாரணம் ஆயிரம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையா? இந்த பாலிவுட் நடிகர் தானாம்

By Kathick Aug 05, 2023 08:30 AM GMT
Report

வாரணம் ஆயிரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்திற்குப்பின் சூர்யா நடித்த திரைப்படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வாரணம் ஆயிரம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையா? இந்த பாலிவுட் நடிகர் தானாம் | Popular Actor Is First Choice For Vaaranam Aayiram

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. சமீபத்தில் தெலுங்கில் ரீ ரிலீஸான வாரணம் ஆயிரம் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ரூ. 30 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருந்தது. இப்படி சூர்யாவின் கேரியரில் முக்கிய படமாக வாரணம் ஆயிரம் இருக்கிறது.

சூர்யாவிற்கு முன் நடிக்கவிருந்த நடிகர்

இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்திலும், மகன் கதாபாத்திரத்திலும் ஒரே ஆளாக சூர்யா நடித்து அசத்தியிருப்பார்.

ஆனால், முதன் முதலில் அப்பா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது சூர்யா கிடையாதாம். பாலிவுட் நடிகர் நானா படேகர் என்பவர் தான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கவுதம் மேனன் எண்ணியுள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையா? இந்த பாலிவுட் நடிகர் தானாம் | Popular Actor Is First Choice For Vaaranam Aayiram

ஆனால், அவரால் நடிக்கமுடியாமல் போக சூர்யாவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என முன் வந்து கூறியுள்ளார். அதன்பின் தான் அப்பாவாகவும், மகனாகவும் சூர்யாவே நடித்துள்ளார்.

நானா படேகர் தமிழில் ரஜினி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா படத்தில் வில்லனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US