மாணவர்கள் செய்த தவறு என்ன, டெல்லி போராட்டம் குறித்து பிரபல நடிகர் கேள்வி...
டெல்லி போராட்டம்
இந்தியாவில் இப்போது பெரிய போராட்டம் வெடித்துள்ளது. NEET தேர்வு பிரச்சனைக்காக பலரும் குரல் கொடுக்க மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை.
மாணவர்கள் அமைதியாக போராடி வந்தால் இப்போது அவர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அந்த வீடியோக்களை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார், சினிமா பிரபலங்களும் பதிவு போட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த டெல்லி போராட்டம் தொடர்பாக மலையாள சினிமா நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாவில், சரியும், தவறும் சார்புடையதாக இருக்கலாம். ஆனால், அமைதியான போராட்டத்தை இப்படி கையாள்வது சரியல்ல.

நாட்டின் எதிர்கால தலைமுறை குரல்கொடுக்கும்போது, அவை அடக்குமுறை சக்தியால் ஒடுக்கப்பட்டால், நாட்டின் எதிர்காலம் முழுவதுமாக நசுக்கப்படும். மாணவர்கள் செய்த தவறு என்ன? பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்களா..? வன்முறையில் ஈடுப்பட்டார்களா…? அவர்களை இப்படி கையாளும் அளவுக்கு அப்படி என்ன தான் தவறு செய்தார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.