லண்டனில் பிரதீப் ரங்கநாதன்.. யாருக்கு கதை சொல்ல சென்றிருக்கிறார் தெரியுமா

By Parthiban.A Dec 23, 2022 10:00 AM GMT
Report

லவ் டுடே

கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராகவும் களமிறங்கினார். லவ் டுடே படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி பல மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்து இருக்கிறது.

கோமாளி படத்தில் ரஜினிகாந்தை கலாய்த்து ஒரு காட்சி இருக்கும், அதை எல்லாம் மறந்துவிட்டு ரஜினி இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கே அழைத்து பாராட்டினார்.

அதன் பின் தற்போது ரஜினி மற்றும் பிரதீப் இருவரும் ஒரு படத்திற்கு கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லண்டனில் பிரதீப் ரங்கநாதன்.. யாருக்கு கதை சொல்ல சென்றிருக்கிறார் தெரியுமா | Pradeep Ranganathan In London To Meet Subaskaran

லண்டனில் பிரதீப் ரங்கநாதன்

தற்போது பிரதீப் லண்டனுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரனுக்கு கதை சொல்ல தான் அவர் அங்கு சென்றிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர்171 படத்தினை தான் பிரதீப் ரங்கநாதன் இயக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அந்த படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வந்தது, ஆனால் தற்போது அவருக்கு பதில் லவ் டுடே இயக்குனருக்கு ரஜினி வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் என்றும் தெரிகிறது.   

லண்டனில் பிரதீப் ரங்கநாதன்.. யாருக்கு கதை சொல்ல சென்றிருக்கிறார் தெரியுமா | Pradeep Ranganathan In London To Meet Subaskaran

பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US