கே.ஜி.எஃப் இயக்குனர் எடுத்த முடிவு.. ரசிகர்கள் திட்டியது தான் காரணமா?
பிரஷாந்த் நீல்
கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல். நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதன் பின் இவர் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். இதைதொடர்ந்து பாப்புலர் இயக்குனராக மாறிய பிரஷாந்த் நீல், தெலுங்கு நடிகர் பிரபாஸ் வைத்து சளார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கு அடுத்ததாக இவர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல் ஒன்று வெளியானது.
ரசிகர்கள் ட்ரோல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் யாஷ் பிறந்த நாளில் பிரஷாந்த் நீல் உருது மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரின் உருது மொழி வாழ்த்து, கன்னட ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கே.ஜி.எஃப் பட வெற்றியின் பிறகு பிரஷாந்த் நீல் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனதால், கன்னட ரசிகர்கள் பிரஷாந்த் நீலை சமூக வலைத்தளங்களில் திட்டி வந்துள்ளனர். இதனால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து பிரஷாந்த் நீல் விலகிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
துணிவு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றிய படக்குழுவினர்.. இது தான் காரணமா?