திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகர் பிரவீன் தாயார்- தற்போது அவரது நிலை, புகைப்படம்
சினிமா பிரபலங்களை விட சீரியல் கலைஞர்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருக்கமாக இருக்கிறார்கள். அன்றாடம் அவர்களை திரையில் காண மக்கள் சீரியல் நடிகர்களை தங்களது வீட்டில் இருக்கும் ஒருவராக கருதி விடுகிறார்கள்.
பிரவீன்
விஜய்யில் நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே 2, பாரதி கண்ணம்மா என்ற சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. இந்த தொடர்களில் எல்லாம் வெயிட்டான வேடம் இல்லை என்றாலும் மக்கள் அங்கீகரிக்கும் வகையில் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த நடிகைக்கும் சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

மருத்துவமனையில் அவரது தாயார்
இந்த நிலையில் பிரவீன் தனது அம்மாவுடன் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவரது தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
ஆனால் என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளார் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் ரஷ்மிகாவின் சீமந்த நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்