நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகாவின் சீமந்த நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான தொடர்களில் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் கதை, நடிகைகளை தாண்டி மாயன் என்ற ஒரு கதாபாத்திரத்திற்காகவே மக்கள் சிலர் பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.
முதல் பாகம்
இந்த தொடரின் பெயரில் வேறொரு கதை ஓடிக் கொண்டிருந்தது, அதில் தாமரை என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா. கொரோனா காரணமாக சீரியல் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட அதன்பிறகு வேறொரு கதைக்களத்தில் அதே பெயரில் தொடர் பயணித்து வருகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கும் பிறகு ரஷ்மிகாவிற்கு ஜெயராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது, அந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டார். அதன்பின் ரஷ்மிகா ராஜபார்வை என்ற தொடரில் நாயகியாக நடித்து வர அந்த சீரியலையும் சீக்கிரமே முடித்து சுபம் போட்டுவிட்டார்கள்.
சீமந்த நிகழ்ச்சி
இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா கர்ப்பமாகியுள்ளார். சில புகைப்படங்களையே அவர் கர்ப்ப நேரத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது அவருக்கு உறவினர்கள் சில சினிமா பிரபலங்கள் சூழ அழகாக சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டதே இதனால் தானா?- வெளிப்படையாக கூறிய நடிகை