சன் டிவி மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து நடிகை ப்ரீத்தி போட்ட முதல் பதிவு... என்ன ஆனது?
மலர் சீரியல்
சீரியல் ஆரம்பிக்கும் போது ஒருவர் நடிப்பதும் முடிவதற்குள் பலர் மாறுவதும் வழக்கம் தான்.
சின்னத்திரையில் இந்த விஷயம் நிறைய நடந்து வருகிறது. அப்படி அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நாயகியாக நடித்துவந்த ஷபானா வெளியேற புதிய நாயகி நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் இன்னொரு முக்கிய சீரியலான மலர் தொடரில் இருந்து தான் விலகுவதாக ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ப்ரீத்தி ஷர்மா.
அவருக்கு பதில் விஜய் டிவியில் மோதலும் காதலும் தொடரில் நடித்துவந்த அஸ்வதி நாயகியாக மலராக நடித்து வருகிறார்.

வெளியேறியது ஏன்
இதுநாள் வரை மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து பேசாமல் இருந்த ப்ரீத்தி ஷர்மா தற்போது முதன்முறையாக ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், மலர் சீரியலில் இருந்து வெளியேறியது நான் எடுத்த கஷ்டமான முடிவு தான்.
எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, அருமையான குழுவை மிஸ் செய்ய போகிறேன் என பதிவு செய்துள்ளார். ஆனால் ஏன் வெளியேறினேன் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri