சீரியல் நடிகை மகாலட்சுமி கணவர் ரூ. 15 லட்சத்தை ஏமாற்றினாரா?- எழுந்த புகார்
மகாலட்சுமி-ரவீந்தர்
தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ பிரபலங்களின் திருமணம் நடந்தது, ஆனால் இந்த பிரபலங்கள் கல்யாணம் குறித்து ரசிகர்கள் பேசியது போல் யாருமே பேசவில்லை என்று தான் கூற வேண்டும்.
சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டதும் ரசிகர்கள் அட இவர்கள் இணைந்தார்களா என்று தான் ஷாக் ஆனார்கள்.
அதன்பிறகு அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள்.
ஏமாற்றிய ரவீந்தர்
தற்போது தயாரிப்பாளர் ரவீந்தர் ரூ. 15 லட்சத்தை ஏமாற்றியதாக அமெரிக்காவில் இருக்கும் விஜய் என்பவர் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார்.
ரூ. 15 லட்சத்தை வாங்கிவிட்டு தயாரிப்பாளர் ஏமாற்றி வருகிறார் என விஜய் புகார் கொடுக்க அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதற்கு ரவீந்தர், விஜய்யிடம் ரூ. 15 லட்சம் வாங்கியது உண்மைதான், ஆனால் அவர் வெளிநாட்டில் இங்கு கொண்டுவர முடியாமல் தன்னிடம் கொடுத்ததாகவும், அவரது உறவினர் யாராவது வந்து கேட்டால் கொடுத்துவிடுவேன் என்றும் கூலாக கூறியிருக்கிறார்.
திடீரென தனது தந்தை குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்- இதுதான் காரணமா?