விஜய் பிறந்து வளர்ந்த வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- ஷாக்கான ரசிகர்கள்
விஜய்-சந்திரசேகர்
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர் விஜய். இவர் படங்கள் என்றாலே திருவிழா கோலமாக இருக்கும். விஜய் என்ன விஷயம் செய்தாலும் ஸ்பெஷல் தான்.
இப்போது தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தில் ராஜு அவர்கள் தயாரிக்கிறார்கள்.
தற்போது படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் மட்டும் வெளியாகியுள்ளது.
சினிமாவை தாண்டி விஜய்க்கும் அவரது அப்பாவிற்கும் சில பிரச்சனைகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வது இல்லை என்றெல்லாம் கூறப்பட்டது.
ஜப்தி செய்ய உத்தரவு
கடந்த 2011 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் குற்ற பரம்பரை என்ற திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக 76 ஆயிரத்து 122 ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்தத் தொகையை இத்தனை வருடங்கள் கழித்தும் சந்திரசேகர் திருப்பித் தரவில்லை என்று விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த வழக்கு விசாரணையில் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் டேபிள், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்தி செய்ய சென்றபோது எஸ்.ஏ.சந்திரசேகர் போலீஸ் உதவியுடன் அதனை தடுத்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாறுமாறான வசூல் வேட்டையில் சரவண அருளின் தி லெஜண்ட்- இதுவரை இவ்வளவு வசூலா?